Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் - 628215, தூத்துக்குடி .
Arulmigu Subramania Swamy Temple, Tiruchendur - 628215, Thoothukudi District [TM038271]
×
Temple History

தல பெருமை

முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஒரு கடற்கரை கோயிலாக அமைந்துள்ளது. முருகப்பெருமானின் படை வீடு அனைத்தும் மலைகளில் அமைந்திருக்க இத்திருத்தலம் வங்காள விரிகுடா அருகில் அமைந்துள்ளது தனிச்சிறப்பு ஆகும். மேலும் இத்திருக்கோயில் ஆதிகாலங்களில் இருந்து சந்தனமலையின் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறது. இத்திருத்தலம் இந்து மதத்தினரால் புனிதமாக கருதப்பட்டு வணங்கப்படும் சிறந்த தலத்தில் ஒன்றாகும். இத்திருக்கோயில் தென்னிந்திய தீபகற்பத்தின் தென் மேற்கில் அமைந்துள்ளது. தமிழனின் பண்டைய நூல்களில் குறிப்பிடுவது போல் இத்திருக்கோயில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலான கட்டமைப்பு உடையதாக கருதப்படுகிறது. பக்தி இலக்கியத்திலும் முருகப்பெருமானின் வழிபாடு சங்ககாலத்தில் விவரமாக திருமுருகாற்றுப்படையில், இத்திருத்தலம் அதிகமாக குறிப்பிடப்படுகிறது. ஆறு படை வீடுகளில் திருச்செந்தூர் முக்கியத்துவம்...

இலக்கிய பின்புலம்

திருச்செந்தூர் என்றால் செழிப்பான நகரம் என்று பொருள். தமிழ் இலக்கியங்களில் திருச்சீரலைவாய் செந்தில் மாநகரம் மற்றும் திருச்செந்தூர் என்றும் சமஸ்கிருத நூல்களில் ஜெயந்திபுரம் மற்றும் சிந்துபுரம் என்றும் பிற்கால பாண்டியர்கள் கல்வெட்டுகளில் திருபுவன மகாதேவி சதுர்த்தேவி மங்கலம் என்றும் திருப்புகழில் திருச்செந்தூர் என்றும் பல்வேறு பெயர்களில் அறியப்படுகிறது. நக்கீரரால் இயற்றப்பெற்ற திருமுருகாற்றுப்படையில் திருச்செந்தூர் இரண்டாவது தலமாக அமையப்பெற்றுள்ளது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்களில் திருச்செந்தூரை போற்றி புகழ்ந்துள்ளார். அருணகிரிநாதர் முருகனின் அருளை பெற்றவர் ஆவார். அவருடைய பாடல்களை அவர் முருகன் மீது கொண்டுள்ள பற்றுதலை வெளிப்படுத்துகிறது. குமரகுருபர சுவாமிகள் கந்தர் கலிவெண்பா இயற்றினார் இவர் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர்கள் திருச்செந்தூர் முருகனிடம் நீண்ட தவத்திற்கு பின் இவரை பெற்றனர். குழந்தை ஐந்து வயது...

புராண பின்புலம்

முன்பொரு காலத்தில் இரண்டு வெவ்வேறு முனிவர்கள் குழு இருப்பது வேதங்களிலிருந்து கண்டறியப்பட்டது. அவர்களில் ஒருவர் தேவர்கள் என்றும் மற்றவர்கள் அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். அசுரர் குழு தேவர்களுக்கு எதிராக பல தொல்லைகளை செய்து வந்தார்கள் . தேவர்களுக்கு தொல்லை கொடுத்த முக்கிய அசுரர் சூரபத்மன் என்று அழைக்கப்பட்டார். அசுரர் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து வரம் பெற்றவன் .எனவே தேவர்கள் சூரபத்மன் தமக்கு இழைத்த அநீதிகளை முறையிட்டு அவனை அழிக்க சிவபெருமானை வேண்டுகிறார்கள் . சிவபெருமான் தேவர்களின் பிராத்தனையை ஏற்றுக்கொண்டார் . தேவர்களுக்கு தொல்லைகள் கொடுத்து வந்த அசுர வம்ச சூரபத்மனை அழிக்க சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணில்...